
கோவை அருகே திருட முயன்றதாக வடமாநில இளைஞரை கட்டி வைத்து தாக்கியதில் உயிரிழந்தார். இதுதொடர்பாக, 10 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
கோவை மாவட்டம் தென்னமநல்லூர் செல்லும் சாலையில் உள்ள நொய்யலாற்றுப் பாலத்தின் கீழ் தண்ணீரில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞரின் சடலம் கிடப்பதாக நேற்று முன்தினம் ஆலாந்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் சென்று உடலை மீட்டு ஆய்வு செய்ததில், அந்த இளைஞரின் தலை மற்றும் உடலில் ரத்தக் காயங்கள் இருப்பது தெரிந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments