
கொடைக்கானல்: கொடைக்கானல் தாண்டிக்குடி அருகே பள்ளிகுச் சென்ற சிறுமியைகொன்ற கொலையாளியை கைது செய்யக் கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திண்டுக்கல்லில் மறியலில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல் மலைப்பகுதி தாண்டிக்குடி அருகேயுள்ள பாச்சலூரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் 9 வயது மகள் அங்குள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5-ம் வகுப்புப் படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை பள்ளி இடைவேளையின்போது இவரை திடீரென காணவில்லை. நீண்ட நேர தேடுதலுக்குப் பின்பு பள்ளிக்கு அருகே உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments