Advertisement

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் அடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, வேலூர், விழுப்புரம், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments