
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சனிக்கிழமை விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இதேபோல, செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடைபெறும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தவிர மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments