Advertisement

ஊரக உள்ளாட்சித் தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2ஆவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் இன்று இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments