Advertisement

இந்தியாவில் ஒரேநாளில் 31,382 பேருக்கு கொரோனா - மத்திய சுகாதார அமைச்சகம்

இந்தியாவில் ஒரேநாளில் 15,65,696 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 31,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,35,63,421லிருந்து 3,35,94,803ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. நேற்று முன்தினம் 26,964, நேற்று 31,923 என தொற்று பதிவான நிலையில் இன்று 31,382 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 32,542 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,28,15,731லிருந்து 3,28,48,273ஆக உயர்ந்திருக்கிறது. குணமடைந்தோர் விகிதம் 97.78%ஆக உள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 318 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தோர் எண்ணிக்கை 4,46,050லிருந்து 4,46,368ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.33%ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,00,162 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 55.99 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

60 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ் 

இந்தியாவில் இதுவரை 84.15 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 72,20,642 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 4,36,99,126 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments