Advertisement

"இதயங்களில் எப்போதும் நிறைந்திருப்பார் மில்கா சிங்"-பிரதமர் மோடி இரங்கல்

கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களில் மில்கா சிங் எப்போதும் நிறைந்திருப்பார் என்று முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பதிவில் "தேசத்தின் கற்பனையை கைப்பற்றிய மற்றும் இந்தியர்களின் இதயங்களில் சிறப்பு இடத்தைப் பெற்ற ஒரு மகத்தான விளையாட்டு வீரரை நாங்கள் இழந்துவிட்டோம். விளையாட்டில் அவரது எழுச்சியூட்டும் ஆளுமை மில்லியன் கணக்கானவர்களைப்போல் தன்னையும் நேசிக்க வைத்தது"

மேலும் "கடந்த சில நாள்களுக்கு முன்பதான் மில்கா சிங்கிடம் தொலைப்பேசியில் பேசினேன். ஆனால் அதுதான் அவருடன் நான் பேசும் இறுதி உரையாடல் என அறிந்திருக்கவில்லை. நாட்டில் வளர்ந்து வரும் அத்தனை தடகள வீரர்களுக்கும் மில்கா சிங்கின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாகவும், உத்வேகம் அளிக்க கூடியதாகவும் இருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் என்னுடைய இரங்கல்கள்" என மோடி தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments