
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60,753 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர், குணமடைந்தோர், சிகிச்சை பெறுவோர் குறித்து தினமும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று வெளியாகியுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 60 ஆயிரத்து 753 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 97,743 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,647 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது தொற்று பாதிப்புடன் 7 லட்சத்து 60 ஆயிரத்து 019 சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வரையில் 27 கோடியே 23 லட்சத்து 88 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments